நான் வந்துட்டேன்னு சொல்லு..

சென்ற மாத கடைசியில் ஜெயமோகன் தளத்திற்கு எழுதிய கடிதத்தில் இப்படிக்கு என்று எனது பெயரையும், இந்த இணையதள முகவரியையும் கொடுத்திருந்தேன். அங்கிருந்து யாராவது வந்து பார்ப்பார்கள் என்ற சில்லறை புத்திதான். இந்த இணையத்தளம் ஆரம்பித்து ஐந்து மாதங்களாக  இந்த தளத்தின் வருகையாளர்கள்  எண்ணிக்கை ஒரு நாளுக்கு மூன்று தான். மூன்றும் நான் தான். என் மொபைலில், என் மடிக்கணினியில் அப்புறம்  என் அலுவலக கணினியில் பார்ப்பேன். ஆனால் அந்த கடிதம் அவரது இணையதளத்தில் பிரசுரமான அன்று இருநூற்று […]

ஆலயத்தில் இந்துக்கள் அல்லாதவர்களுக்கு அனுமதி தேவையா?- எதிர்வினை

ஜெயமோகன் தளத்தில் அவர் கூறியிருந்த ஒரு பதிலுக்கு எதிர் வினைஆற்றி ஒரு கட்டுரை . அவரது தளத்தில் பிரசுரமாயிருந்தது    அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, ஆலயத்தில் இந்துக்கள் அல்லாதவர்களுக்கு அனுமதி தேவையா?(http://www.jeyamohan.in/101766#.WakeUrIjHIU) என்ற கேள்விக்கு உங்கள் பதிலைப் படித்தேன். இதை எந்த மனநிலையில் நீங்கள் எழுதினீர்கள் என்று தெரியவில்லை. உங்களிடம் இருந்து இவ்வளவு ஒரு தலை பட்சமான பதில் வந்தது வருத்தத்திற்குரியதுதான். ஒரு பக்கத்தில் நின்று கொண்டு அதற்கான காரணங்களை சப்பைக்கட்டு கட்டுவது போலத்தான் தெரிகிறது. நீங்கள் சொல்வது, கோவிலில் […]