கோவா ஹிப்பிகள்

“அண்ணே, திருமணமாகாத ஒவ்வொரு இளைஞனும் கண்டிப்பாக சென்று  பார்க்க வேண்டிய இடம், கோவா” என்று இதற்கு முன் கோவா சென்றிடாத எவனோ ஏற்றிவிட சகபாடி கனவில் நீச்சல் உடையில் கடற்கரையோரம் ஓடி வரும் வெள்ளைக்காரிகள் வரத்தொடங்கிவிட்டார்கள். ஒரு நாள் எனக்கு போன் போட்டு கண்டிப்பாக கோவா போறோம் என்று சொல்லிவிட்டான். இரண்டு வருடத்திற்கு முன்பும் இதே தான் சொன்னான். கடைசியில் நான் மட்டும் தான்  தனியாக ராஜஸ்தான் சென்று வந்தேன். கனவுகளில் வெள்ளைக்காரிகளின் சேட்டை அதிகமாக அடுத்த […]

அடுத்த பதிவு

2018க்கான பட்ஜெட் வெளியான நாளில் இருந்தே இந்தியாவின் ஷேர் மார்க்கெட் படுத்த படுத்தையாய் இருக்கிறது . ஷேர் மார்க்கெட்டில் வரும் லாபத்திற்கு வரியை அதிகரித்து இருக்கிறார்களாம். அது மட்டுமே காரணமாக இருக்காது. இது மாதிரி, எந்த விதமான நிகழ்வுகள் நடந்தாலும் ஷேர் மார்க்கெட் இறங்கி அடுத்த வாரம் பழைய படி வந்து விடும். என்ன நடக்கிறது என்பது அதில் இருப்பவர்களுக்குத்தான் தெரியும். உனக்கென்ன வந்தது என்று கேட்கிறீர்களா? அது சரி Margot robbieக்கும் மண்குண்டான்பட்டிக்கும் என்ன சம்பந்தம். […]

குற்றமும் தண்டனையும் நாவல் – சில எண்ணங்கள்

எது குற்றம்? ஒருவருக்கு குற்றமாகப்படுவது இன்னொருவருக்கு குற்றமாக இல்லாமல் போகலாம். இப்போது குற்றமாக இருப்பது எதிர்காலத்தில் குற்றமற்றதாகிப் போகலாம். ஏன் ஒருவருக்கு ஒரு மனநிலையில் குற்றமாக இருப்பது இன்னொரு மனநிலையில் இல்லாமல் போகலாம். குற்றத்திற்கு எது தண்டனை? ஒவ்வொரு குற்றத்திற்கும் தண்டனையை சமூகம் வகுத்துள்ளது. ஆனால் எல்லா குற்றத்திலும் நேரடடியாகவோ மறைமுகமாவோ சமூகத்திற்கு ஒரு முக்கியமான பங்கு உள்ளது. அப்படி இருக்கும் போது தண்டனை யார் தருவது?மன்னிக்கவோ தண்டிக்கவோ யாருக்கு தகுதி இருக்கிறது? இவ்வாறு குற்றத்தைப்  பற்றியும் […]

வயதாகிவிட்டது

‘இப்ப வர பாட்டு ஒண்ணும் கேக்குற மாதிரியே இல்ல’ என்ற எண்ணம் எழுந்தாலே வயதாகி விட்டது என்று தானே அர்த்தம். எனக்கு வயதாகிவிட்டது. இங்கு ‘இப்போது’ என்பதை கடந்த ஐந்து ஆண்டுகள் என்று கொள்க. எனக்கு டிவி பார்க்கும் பழக்கம் இல்லை. ரேடியோவும் கேட்பதில்லை. அதனால் இப்ப வரும் பாடல்களை அதிகம் கேட்பதில்லை. கேட்ட சில பாடல்கள் மூலம் எந்த லட்சணத்தில் இப்போது பாடல் வருகின்றன என்று தெரிகிறது. முதலில் கேட்கும் போது நன்றாக தெரியும் பாடல்களும் […]

பாபாஜி, ரமணர், யோகானந்தா, இலியானா

மூன்று வருடத்திற்கு முன்பு எனது அண்ணனின் நண்பர் ஒருவர் பாபா திரைப்படத்தின் கதை தன்னுடையது தான் என்று சுற்றிக்கொண்டிருந்தார். கதை என்றால் அவர் எழுதிய கதை அல்ல அவரது வாழ்க்கையையே ரஜினி படமாக எடுத்திருக்கிறார் என்று. நிஜமாகத்தான். எல்லா விதமான கெட்ட பழக்கங்களும் உள்ளவன் பின் திருந்தி ஆன்மீக வழியில் செல்வது. இது தான் அவர் பாபா படத்திலிருந்து தன் வாழ்க்கையாக கண்டு கொண்ட கதை. அப்படி என்ன ஆன்மீகத்தை  அடைந்தார் என்று தெரியவில்லை. இப்போது அவருக்கு […]

நான் வந்துட்டேன்னு சொல்லு..

சென்ற மாத கடைசியில் ஜெயமோகன் தளத்திற்கு எழுதிய கடிதத்தில் இப்படிக்கு என்று எனது பெயரையும், இந்த இணையதள முகவரியையும் கொடுத்திருந்தேன். அங்கிருந்து யாராவது வந்து பார்ப்பார்கள் என்ற சில்லறை புத்திதான். இந்த இணையத்தளம் ஆரம்பித்து ஐந்து மாதங்களாக  இந்த தளத்தின் வருகையாளர்கள்  எண்ணிக்கை ஒரு நாளுக்கு மூன்று தான். மூன்றும் நான் தான். என் மொபைலில், என் மடிக்கணினியில் அப்புறம்  என் அலுவலக கணினியில் பார்ப்பேன். ஆனால் அந்த கடிதம் அவரது இணையதளத்தில் பிரசுரமான அன்று இருநூற்று […]

ஆலயத்தில் இந்துக்கள் அல்லாதவர்களுக்கு அனுமதி தேவையா?- எதிர்வினை

ஜெயமோகன் தளத்தில் அவர் கூறியிருந்த ஒரு பதிலுக்கு எதிர் வினைஆற்றி ஒரு கட்டுரை . அவரது தளத்தில் பிரசுரமாயிருந்தது    அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, ஆலயத்தில் இந்துக்கள் அல்லாதவர்களுக்கு அனுமதி தேவையா?(http://www.jeyamohan.in/101766#.WakeUrIjHIU) என்ற கேள்விக்கு உங்கள் பதிலைப் படித்தேன். இதை எந்த மனநிலையில் நீங்கள் எழுதினீர்கள் என்று தெரியவில்லை. உங்களிடம் இருந்து இவ்வளவு ஒரு தலை பட்சமான பதில் வந்தது வருத்தத்திற்குரியதுதான். ஒரு பக்கத்தில் நின்று கொண்டு அதற்கான காரணங்களை சப்பைக்கட்டு கட்டுவது போலத்தான் தெரிகிறது. நீங்கள் சொல்வது, கோவிலில் […]

வெண்ணிற இரவுகள்: ரஷ்யப்பயணம் -8

காலை குளித்து விட்டு குளியலறையில் இருந்து வெளியே வரும்போது ஐம்பது வயது மதிக்கத்தக்க தமிழர் போன்ற ஒருவர்  நின்று கொண்டிருந்ததைப் பார்த்தேன். அப்போது அவரிடம் ஒன்றும் பேசவில்லை. நேராக அறைக்கு வந்து கிளம்பி விட்டேன். அறையில் இருந்த ஜோடி தூங்கும் நேரம் தவிர்த்து மற்ற நேரங்களில் கீழ் படுக்கையில் படுத்து கொஞ்சிக் கொண்டிருப்பார்கள்.கூட இருந்த மற்றொருவன் தூங்கிக்கொண்டிருப்பான். சாப்பிடும் அறை, அதை சாப்பிடும் அறை என்றெல்லாம் சொல்ல முடியாது meeting அறை என்று சொல்லலாம், எனது அறைக்கு […]

ஜார் அரியணை -1

ரஷ்ய ஜார் மன்னர்களின் ஆட்சியில் அடுத்து யார் அரியணைக்கு வரவேண்டும் என்பதில் அதிர்ஷ்டம், துரோகம், தற்செயல், பேராசை, சுயநலம், காமம் இவை எல்லாம் முக்கியப் பங்கு வகித்தன. அந்த வரலாற்றை பின் வரும் சில கட்டுரைகளில் காண்போம். இந்த வரலாற்றை முதலாம் பீட்டர் மன்னரிடமிருந்தது ஆரம்பிக்கிறேன். ஜார் மன்னர் பியோதர் இறந்த பிறகு அடுத்து யார் அரியணை ஏறுவது என்பதில் குழப்பம் ஏற்பட்டது. 1682இல் உடல்நலக்குறைவால் இறந்த போது அவருக்கு வயது 20. இயல்பாகவே பலவீனமானவர். முதல் […]

வெண்ணிற இரவுகள்: ரஷ்யப்பயணம்-7

செயின்ட் பீட்டர்ஸ்பர்க். நேவா நதிக்கரையில்(நதியின் மீது) அமைந்துள்ள இந்த நகரம் ரஷ்யாவின் முக்கிய துறைமுகநகரம். பெட்ரோக்ராட், லெனின்க்ராட், செயின்ட் பீட்டர்ஸ்பர்க் என்று விதவிதமான பெயர்களில் அழைக்கப்படும் இந்த நகரம் பீட்டர் ஜார் மன்னரால் நிறுவப்பட்டது. பீட்டர் மன்னர் கடல் வழி வாணிபத்திற்காக ரஷ்யாவிற்கு ஒரு துறைமுகம் வேண்டும் என்று விரும்பினார். எனவே 1703இல் நேவா நதிக்கரையில் அமைந்திருந்த இங்கெர்மன்லேண்ட் (Ingermanland) என்று அழைக்கப்பட்ட ஸ்வீடிய காலனிய ஆதிக்கத்தில் இருந்த பகுதியை கைப்பற்றினார். நேவா நதி பால்டிக் கடலோடு […]