நான் வந்துட்டேன்னு சொல்லு..

சென்ற மாத கடைசியில் ஜெயமோகன் தளத்திற்கு எழுதிய கடிதத்தில் இப்படிக்கு என்று எனது பெயரையும், இந்த இணையதள முகவரியையும் கொடுத்திருந்தேன். அங்கிருந்து யாராவது வந்து பார்ப்பார்கள் என்ற சில்லறை புத்திதான். இந்த இணையத்தளம் ஆரம்பித்து ஐந்து மாதங்களாக  இந்த தளத்தின் வருகையாளர்கள்  எண்ணிக்கை ஒரு நாளுக்கு மூன்று தான். மூன்றும் நான் தான். என் மொபைலில், என் மடிக்கணினியில் அப்புறம்  என் அலுவலக கணினியில் பார்ப்பேன். ஆனால் அந்த கடிதம் அவரது இணையதளத்தில் பிரசுரமான அன்று இருநூற்று […]

ஆலயத்தில் இந்துக்கள் அல்லாதவர்களுக்கு அனுமதி தேவையா?- எதிர்வினை

ஜெயமோகன் தளத்தில் அவர் கூறியிருந்த ஒரு பதிலுக்கு எதிர் வினைஆற்றி ஒரு கட்டுரை . அவரது தளத்தில் பிரசுரமாயிருந்தது    அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, ஆலயத்தில் இந்துக்கள் அல்லாதவர்களுக்கு அனுமதி தேவையா?(http://www.jeyamohan.in/101766#.WakeUrIjHIU) என்ற கேள்விக்கு உங்கள் பதிலைப் படித்தேன். இதை எந்த மனநிலையில் நீங்கள் எழுதினீர்கள் என்று தெரியவில்லை. உங்களிடம் இருந்து இவ்வளவு ஒரு தலை பட்சமான பதில் வந்தது வருத்தத்திற்குரியதுதான். ஒரு பக்கத்தில் நின்று கொண்டு அதற்கான காரணங்களை சப்பைக்கட்டு கட்டுவது போலத்தான் தெரிகிறது. நீங்கள் சொல்வது, கோவிலில் […]

வெண்ணிற இரவுகள்: ரஷ்யப்பயணம் -8

காலை குளித்து விட்டு குளியலறையில் இருந்து வெளியே வரும்போது ஐம்பது வயது மதிக்கத்தக்க தமிழர் போன்ற ஒருவர்  நின்று கொண்டிருந்ததைப் பார்த்தேன். அப்போது அவரிடம் ஒன்றும் பேசவில்லை. நேராக அறைக்கு வந்து கிளம்பி விட்டேன். அறையில் இருந்த ஜோடி தூங்கும் நேரம் தவிர்த்து மற்ற நேரங்களில் கீழ் படுக்கையில் படுத்து கொஞ்சிக் கொண்டிருப்பார்கள்.கூட இருந்த மற்றொருவன் தூங்கிக்கொண்டிருப்பான். சாப்பிடும் அறை, அதை சாப்பிடும் அறை என்றெல்லாம் சொல்ல முடியாது meeting அறை என்று சொல்லலாம், எனது அறைக்கு […]

ஜார் அரியணை -1

ரஷ்ய ஜார் மன்னர்களின் ஆட்சியில் அடுத்து யார் அரியணைக்கு வரவேண்டும் என்பதில் அதிர்ஷ்டம், துரோகம், தற்செயல், பேராசை, சுயநலம், காமம் இவை எல்லாம் முக்கியப் பங்கு வகித்தன. அந்த வரலாற்றை பின் வரும் சில கட்டுரைகளில் காண்போம். இந்த வரலாற்றை முதலாம் பீட்டர் மன்னரிடமிருந்தது ஆரம்பிக்கிறேன். ஜார் மன்னர் பியோதர் இறந்த பிறகு அடுத்து யார் அரியணை ஏறுவது என்பதில் குழப்பம் ஏற்பட்டது. 1682இல் உடல்நலக்குறைவால் இறந்த போது அவருக்கு வயது 20. இயல்பாகவே பலவீனமானவர். முதல் […]

வெண்ணிற இரவுகள்: ரஷ்யப்பயணம்-7

செயின்ட் பீட்டர்ஸ்பர்க். நேவா நதிக்கரையில்(நதியின் மீது) அமைந்துள்ள இந்த நகரம் ரஷ்யாவின் முக்கிய துறைமுகநகரம். பெட்ரோக்ராட், லெனின்க்ராட், செயின்ட் பீட்டர்ஸ்பர்க் என்று விதவிதமான பெயர்களில் அழைக்கப்படும் இந்த நகரம் பீட்டர் ஜார் மன்னரால் நிறுவப்பட்டது. பீட்டர் மன்னர் கடல் வழி வாணிபத்திற்காக ரஷ்யாவிற்கு ஒரு துறைமுகம் வேண்டும் என்று விரும்பினார். எனவே 1703இல் நேவா நதிக்கரையில் அமைந்திருந்த இங்கெர்மன்லேண்ட் (Ingermanland) என்று அழைக்கப்பட்ட ஸ்வீடிய காலனிய ஆதிக்கத்தில் இருந்த பகுதியை கைப்பற்றினார். நேவா நதி பால்டிக் கடலோடு […]

வெண்ணிற இரவுகள்: ரஷ்யப்பயணம்-6

இன்று Izmailovsky மார்க்கெட் செல்வதாக திட்டம். எப்படியும் மதியம் 12 மணிக்குத்தான் அறையை காலிசெய்ய வேண்டும். காலை 11 மணிக்கு தான் மார்க்கெட் திறக்கும். அதனால் ஒரு 10.30க்கு அங்கு இருந்தால் நன்றாக இருக்கும் என்று காலையிலே சீக்கிரமாக எழுந்து கிளம்பினேன. வரவேற்பறையில் இப்போது அந்த கோமட்டிப்பயல் உட்கார்ந்திருந்தான். அவனிடம் சென்று விசா ரெஜிஸ்டர் பற்றி விசாரித்தேன். அவனும் தேடித் பார்த்து விட்டு செய்யவில்லை என்றான். சரி இன்று செய்து தர முடியுமா? என்று கேட்டேன். எப்பொழுது […]

வெண்ணிற இரவுகள்: ரஷ்யப்பயணம்-5

மறுநாள் லெனின் உடலைப் பார்க்க மீண்டும் செஞ்சதுக்கம் செல்ல வேண்டும். சரியாக திட்டமிடாததால் மீண்டும் மீண்டும் செஞ்சதுக்கம். ஆனால் செஞ்சதுக்கத்தில் இருப்பது ஏனோ மிகவும் சந்தோஷமாகவே இருந்தது. பொதுவாக பயணம் சென்று வந்த பிறகு எல்லோரும் கேட்பார்கள் அங்கு என்ன இருக்கிறது என்ன பேமஸ் என்று. நான் பொதுவாக அங்கு இருக்கும் சுற்றுலா தளங்களை பற்றி சொல்வேன். ஆனால் உண்மையில் எனக்கு வெளி இடங்களில், வேறு பண்பாடு உடைய இடங்களில்  முக்கியமாக வெளிநாடுகளில் வெறுமனையாக இருப்பதே சந்தோஷம்தான். […]

வெண்ணிற இரவுகள்: ரஷ்யப்பயணம்-4

மறுநாள் க்ரெம்ளினில் Armour chamber மியூசியம் பார்க்க முடிவு செய்திருந்தேன்.லெனின் சமாதிக்கு சென்று அவர் உடலையும் பார்த்துவிடலாம் என்று நினைத்தால் திங்கட்கிழமை விடுமுறையாம்.அடுத்த நாள் தான் பார்க்கமுடியும்.காலை எழுந்து கிளம்பி நேராக மெக் டி சென்று பழைய ரசீதை காண்பித்து பர்கர் காபி வாங்கி சாப்பிட்டுவிட்டு மெட்ரோ பிடித்து மீண்டும் கிரெம்லின் சென்றுவிட்டேன்.இன்று திங்கட்கிழமை என்பதால் கூட்டம் கொஞ்சம் குறைவாகவே இருந்தது.சிறிது நேரம் பூங்காவிலும் செஞ்சதுக்கத்திலும் சுற்றி புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு Armour chamber அனுமதிச்சீட்டு வாங்கும் நீண்ட […]

வெண்ணிற இரவுகள்: ரஷ்யப்பயணம் -3

காலை எழுந்ததே எட்டரை மணிக்குத்தான்.அறையில் வேறு யாரும் இல்லை. வெளியே கிளம்பி சென்றிருந்தார்கள்.ஹாஸ்டெலிலேயே காலை உணவுக்கு ஆர்டர் செய்திருந்தேன்.ஓட்ஸ் கஞ்சியும்,பிரெட்டும், ஜூசும் வைத்திருந்தார்கள். குளித்து சாப்பிட்டுவிட்டு கிளம்பி விட்டேன்.கிரெம்லின் மற்றும் செஞ்சதுக்கத்தை(Red Square) பார்ப்பதுதான் திட்டம்.மெட்ரோ ரயிலில் ஐந்து நிமிடத்தில் போய் சேர்ந்து விட்டேன். மெட்ரோ ஸ்டேஷனுக்குள் நுழைந்தவுடன் எனது பையை சோதனை செய்தார்கள்.2010இல் இரு மாஸ்கோ மெட்ரோ ஸ்டேஷனில் குண்டு வெடித்து 40பேர் இருந்திருக்கிறார்கள் 100பேர் காயம்பட்டிருக்கிறார்கள். இந்த வருடம் 2017 மார்ச்சில் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் […]

வெண்ணிற இரவுகள்: ரஷ்யப்பயணம்-2

அங்கு நின்று கொண்டிருந்த இளவயது ரஷ்யர் என்னிடம் நல்ல ஆங்கிலத்தில் “Are you looking for something?” என்று கேட்டார்.”ஆம் .Fasol Hostel” என்று கையில் வைத்திருந்த விலாசத்தை காண்பித்தேன்.அதை தனது மொபைலில் கூகுள் மேப்பில் தேடி விட்டு “ஆம் இங்கு தான் இருக்கிறது” என்று கேள்வி பாவத்துடன் சொல்லிவிட்டு அவரும் முன்னும் பின்னும் சென்று எனக்காக  தேடிக் கொண்டிருந்தார். “இந்தியன்?” என்று கேட்டார்.”ஆம்” என்றேன். இறுதியில் ஹாஸ்டெலை கண்டுபிடித்துவிட்டார். ஹாஸ்டல் அங்கு இருந்த ஒரு கட்டிடத்தின் […]